Thursday 7 June 2012

உழைப்பவனின் கல்லறை அல்ல இது !

உழைக்கின்றவனின் ரத்தம் கேட்டார்கள்
அதன் மீது ஒப்பந்தம் என்றார்கள்
கல்லில் கரைந்து போனவனின் கரங்கள் கேட்டார்கள்
அதில் கீதம் இசைக்கப்போவதாக
குழைந்தார்கள்
... வியர்வை சிந்தியவனின் காப்புகளை கேட்டார்கள்
அதில் வலியின் ஓவியம் வரையப்போவதாக வாக்குறுதி தந்தார்கள்
தூக்கத்தின் நடுவேயும் கவலைகள் தாங்கும் அவனின் தூக்கம் சுமக்கும் அவனின்
இதயம் கேட்டார்கள் அருங்காட்சியகம் அமைக்க போவதாக சொன்னார்கள்
யார் நீங்கள் என கேட்டேன்,"அரசாங்கம் !"என்றார்கள்
நான் எனக்கு பேச வராது என்று மௌனித்து காற்றோடு கலந்துப்போனேன்

No comments:

Post a Comment