Thursday 7 June 2012

'தொலையாமல் தொலைந்தவர்கள்'

குற்றங்கள் இல்லா குழந்தைகளின் தெரு அது
சறுக்கி விழும் சேலையின் ஊடே சூரியனை தேடும்
விதிப்புகள் அவர்களுடையது
புள்ளிகளில்லா சிறுத்தைகள் நடமாடும்
வனங்களின் ராஜகுமாரர்கள் அவர்கள்
கண்ணின் மைத்துளியில் கரைந்து விடும்
தருணங்களை தவிராதவர்கள் அவர்கள்
சுழலும் ராட்டினங்களின் சகாக்கள்....
மின்மினிகளை மணலோடு
தோய்த்து விடும்
சாகசக்காரர்கள் அவர்கள்,
பிய்க்கப்படும் மயில் இறகுடன் ஆன காதல் அவர்களுடையது...
மௌனமாகவே நிகழ்கிறது
அந்த தெருவின் ஆக்கிரமிப்பு...
எங்கேயோ பூச்சாண்டிகளின் தர்பாரில் நடக்கிறதாம் வழக்கு..
குற்றங்கள் இல்லா குழந்தைகளின் தெரு அது ...
ஆகவே தீர்ப்பு வரும் போது
அந்த தெரு புரட்டப்படும்
பாடத்தாள்களின் சத்தத்தில் காணாமல் போய் விடும்

No comments:

Post a Comment